வியாழன், 16 ஜூலை, 2020

நிகழ்வு - 3 , த.செல்வராஜ் : : ஆ.சிவசுப்பிரமணியனின் வரலாறும் வழக்காறும்

10.05.2020 மாலை 4.00 மணிக்கு Zoom செயலி வாயிலாக நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் செல்வராஜ் தங்கவேல் ஆ.சிவசுப்பிரமணினின் வரலாறும் வழக்காறும் நூல்குறித்த அறிமுகத்தையும், கவிஞர் இரா.பூபாலன் - கார்த்திக் திலகன் எழுதிய அந்த வட்டத்தை யாராவது சமாதானப்படுத்துங்கள் என்ற நூலையும் அறிமுகம் செய்து உரையாற்றினார்.


செல்வராஜின் உரை

வரலாறும் வழக்காறும்


. சிவசுப்பிரமணியன்அவர்கள் நாட்டார் வழக்காற்றியல் துறையில் மிக முக்கியமான ஆய்வுகளைப் பல ஆண்டுகளாக செய்து வருபவர்அவர் எழுதியவரலாறும் வழக்காறும்என்கிற இந்த நூல் வரலாற்றின் மீது தாக்குதல்களைத் தொடுக்கிறதுவரலாற்றைக் கேள்விக்குட்படுத்துகிறதுபத்து ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்டிருக்கிற இந்த நூல் வரலாற்றின் மீதான நம் பார்வையை மாற்றக்கூடியதாய் அமைந்திருக்கிறது

இந்தியாவின் வரலாற்று வரைவை உருவாக்கிய ஐரோப்பியர்கள்  தன்னின உயர்வுவாத்திற்கு ஆட்பட்டவர்கள்இவர்கள் தங்களின் வரவால் தான், நாகரிகத்தின் ஒளியே நம்மீது பட்டது எனக் கருதினர். இதனால்  நம் நாட்டின் சமூகப்பண்பாட்டு வரலாற்றைப் புறக்கணித்து  நம் வரலாற்றை ஆண்ட மன்னர்களின் பட்டியலாக உருவாக்கினர்.

வரலாறு என்றால் மன்னர்கள் மட்டும் தானா? அதில் பொது மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒரு எதிர்ப்புக்குரல் கூட எழவில்லையா? என்கிற கேள்விகளை எழுப்பும் நூலின் ஆசிரியர், வரலாறு என்பது பொதுமக்கள் சார்ந்த வரலாறாக எழுதப்படவில்லை என்கிறார்.  

வரலாற்றைப் பொதுமக்கள் சார்ந்ததாக எழுதுவதற்கு மக்களிடம் தொடர்ந்து வழங்கி வரும் கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள் மற்றும் சமூக நினைவுகள் போன்ற வழக்காறுகள் உதவுகின்றனஇவ்வழக்காறுகள் ஒரு இனத்தின் வாழ்வியலை, பண்பாட்டை, அவ்வினத்தின் மீதான ஆதிக்கத்தை   அடையாளப்படுத்தும் விதமாக உள்ளன. எனவே, இத்தகைய வழக்காறுகளைக் கொண்டு பொதுமக்கள் சார்ந்த வரலாற்றை எழுத முடியும் என்கிறார் ஆசிரியர்.

பழமொழிகள் நமக்கு வரலாற்றுச் செய்தியைப் புலப்படுத்தும் தன்மை உடையன என்பதைஆனை துரத்தினாலும் ஆனைக்காவில் ஒண்டாதேஎன்கிற பழமொழியானது தமிழ்நாட்டில் நிகழ்ந்த சைவ, வைணவ மோதல்களினால் உருவானதே என்று விளக்கும்போது வழக்காறுகளின் முக்கியத்துவம் தெரிகிறது.

குடியானவர்கள் பிராமணர்களுக்குரிமையான நிலங்களைக் கைப்பற்றும் செயலைத் தொடங்கியபோது, தம் உயிரைக் காப்பாற்றும் விதமாக பிராமணர்கள் பிராமணப் பேயைப் படைத்து அச்சுறுத்தியிருக்கிறார்கள்பிரம்மஹத்தி என்னும் தோசத்தை உருவாக்கியதன் பின்னணியில் பிராமணர்களின் வர்க்க நலனும், வருண நலனும் மறைந்துள்ளன என்பதைக் கூறும்போது வரலாற்றின் மறுபக்கத்தை நம்மால் பார்க்க முடியும்.

அரசு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ஆவணங்களில் உழைக்கும் மக்கள் பற்றியான செய்திகள் என்பது சரியாக இடம்பெறவில்லைஇத்தகைய வரலாற்று ஆவணங்களிலுள்ள செய்திகள் நடந்ததை நடந்தவாறு கூறாமல், அதிகாரிகளின் முகமாகவே இருக்கிறதுஅவற்றில் உண்மைகளோடு மிகுதியான புனைவுகள் கலந்திருப்பதைக் காணமுடிகிறதுஆனால், உண்மையான நிலையினை அவர்களது வழக்காறுகள் நமக்குப் புலப்படுத்தி விடுகின்றன.   மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கதைப்பாடல்களிலிருந்து  அவர்களது வாழ்வியல் முறைமையை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.


கல்வெட்டுகள், இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், தொல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரசு ஆவணங்கள் ஆகியன வரலாற்று வரைவில் சான்றாதரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றனஇவை மட்டுமின்றி மக்களிடையே வழங்கும் வாய்மொழி வழக்காறுகளும், வழிபாட்டுமுறைகளும் வரலாற்று வரைவிற்கான சான்றுகளாக அமையும் தகுதியுடையன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.  


 

                     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...