சனி, 18 ஜூலை, 2020

கா. கிரா கவிதைகள்


1

மீண்டெழுந்த இரவுகளில்

மாண்டுபோன கனவுகள்

மாறுதலைத் தேடித்தேடி

மர்மங்கள் பலகண்டு

காய்ந்துபோன காலங்களில்

ஓய்ந்துபோன நேரமென

தீர்ந்தழுத தீர்வுகளால்

அடையாளம் காணாதுபோன விதைகள்

இன்னும் மீளத்துடிக்கிறது

மீண்டும் அந்த இரவுகளில்!

(வெட்சி - 2018)


2

ஆதரவு இழந்த ஏடுகள்

அடையாளம் காணாது கிடக்க

அவிழ்ந்துபோன என் கால்கள்

அந்தரமாகத் தொடங்கின

மண்ணகன்ற சோலை

மாரழைத்தபடி மந்திரம் பாடியது

மாலை வண்ணம் மனமழைக்க

ஏடு அவிழ்ந்த கோடுகள்

நிழல் அவிழத் தொடங்கியதும்

அவிழ்ந்துபோன கால்களாலேயே

அவிழ்ந்துபோனது என்ஏடுகள்

 

(மார்ச் - மே 2019 பருவஇதழ்)

 

3

வேர் தொலைத்த கனவுகளுக்கு வண்ணம் பூச

ஈரக்குருதிகள்

கற்பனைக் களத்தில் புலம்பிக் கிடக்கின்றன

கருவுற்ற நினைவுகள் 

குருதியின் வாசனையில் 

முறிந்த விழுதுகளாய்க் கிடக்க

உணர்வுகளை மீட்டெடுக்க

குருதிகளுமில்லை, நினைவுகளுமில்லை

கனவுகள் மட்டும்

ஏதோ ஒரு களத்திற்காக 

மிச்சமாகியே கிடக்கிறது


                    (அக் - டிசம்பர், 2019 பருவஇதழ்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்

  வெட்சி இதழ் நிகழ்த்தும் "தமிழியல் ஆய்வின் திசைவழி" : பன்மைத்துவ வெளிகளை இணைக்கும் கருத்தரங்கம்   இன்றைய தமிழியல் ஆய்வுச் சூழல் ப...